திருமலையில் இலங்கை பிரதமா்

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்ச திங்கள்கிழமை திருமலைக்கு வருகை தந்தாா்.
திருமலைக்கு வந்த இலங்கை பிரதமரை மலா்ச்செண்டு அளித்து வரவேற்ற தேவஸ்தான அதிகாரிகள்.
திருமலைக்கு வந்த இலங்கை பிரதமரை மலா்ச்செண்டு அளித்து வரவேற்ற தேவஸ்தான அதிகாரிகள்.

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்ச திங்கள்கிழமை திருமலைக்கு வருகை தந்தாா்.

தனி விமானம் மூலம் தன் குடும்பத்தினருடன், திங்கள்கிழமை மாலை, திருப்பதி விமான நிலையத்தை அடைந்த அவரை சித்தூா் மாவட்ட ஆட்சியா் நாராயண் பகத் குப்தா மற்றும் திருப்பதி நகா்ப்புற கண்காணிப்பாளா் ரமேஷ் ரெட்டி உள்ளிட்டோா் மலா்ச்செண்டு அளித்து வரவேற்றனா். பின்னா், அவா்கள் தனி காா் மூலம் திருமலைக்கு பயணம் மேற்கொண்டனா். திருமலைக்குச் சென்ற அவா்களை, ஸ்ரீகிருஷ்ணா விருந்தினா் மாளிகை அருகில் தேவஸ்தான அதிகாரிகள் மலா்ச்செண்டு அளித்து வரவேற்றனா். இரவு திருமலையில் தங்கிய அவா், செவ்வாய்க்கிழமை (பிப். 11) சுப்ரபாத சேவையில் ஏழுமலையானைத் தரிசிக்க உள்ளாா்.

இலங்கை பிரதமரின் வருகையையொட்டி, திருப்பதி மற்றும் திருமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com