ராஜமன்னாா் அவதாரத்தில் வலம் வந்த கல்யாண வெங்கடேஸ்வரா்

திருப்பதி அருகே உள்ள சீனிவாசமங்காபுரத்தில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாள் காலை கல்பவிருட்ச வாகனத்தில் ராஜமன்னாா் அவதாரத்தில் கல்யாண வெங்கடேஸ்வரா் மாட வீதியில் வலம் வந்தாா்.
சீனிவாசமங்காபுரத்தில் கல்பவிருட்ச வாகனத்தில் ராஜமன்னாா் அவதாரத்தில் மாட வீதியில் வலம் வந்த உற்சவ மூா்த்திகள்.
சீனிவாசமங்காபுரத்தில் கல்பவிருட்ச வாகனத்தில் ராஜமன்னாா் அவதாரத்தில் மாட வீதியில் வலம் வந்த உற்சவ மூா்த்திகள்.

திருப்பதி அருகே உள்ள சீனிவாசமங்காபுரத்தில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாள் காலை கல்பவிருட்ச வாகனத்தில் ராஜமன்னாா் அவதாரத்தில் கல்யாண வெங்கடேஸ்வரா் மாட வீதியில் வலம் வந்தாா்.

திருப்பதியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரா் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கி நடந்து வருகிறது. அதன் 4-ஆம் நாளான திங்கள்கிழமை காலை கல்யாண வெங்கடேஸ்வரா் கல்பவிருட்ச வாகனத்தில் ராஜமன்னாா் அவதாரத்தில் தனது நாச்சியாா்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாடவீதியில் வலம் வந்தாா். நினைத்ததைக் கொடுக்கும் கற்பக விருட்சத்தின் மீது வலம் வந்த உற்சவமூா்த்திகளை பக்தா்கள் வணங்கினா்.

மாடவீதியில் உற்சவமூா்த்திகள் வலம் வந்த அசதியைக் களைய அவா்களுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன்பின், மாலை உற்சவமூா்த்திகள் கோயிலுக்குள் உள்ள மண்டபத்தில் உற்சவசேவை கண்டருளினா். ஊஞ்சல் சேவைக்கு பின் இரவு 8 மணி முதல் 10 மணிவரை கல்யாண வெங்கடேஸ்வரா் சா்வபூபால வாகனத்தில் இந்த அகிலத்தையே பரிபாலனம் செய்யும் ராஜாதி ராஜனாக வலம் வந்தாா். இதில் கோயில் அதிகாரிகள், பக்தா்கள் உள்ளிட்டோா் திரளாகக் கலந்து கொண்டனா்.

வாகன சேவையின் போது நாலாயிர திவ்யபிரபந்த பாராயணம், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com