திருத்தணி முருகன் கோயிலுக்கு சொந்தமான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா அபிஷேகம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜப் பெருமானை தரிசித்து வருகின்றனர்.
நடராஜ பெருமானுக்கு 34 வகையான பழங்களால் விடிய விடிய அபிஷேகம் அதிகாலை 4 மணி வரை நடக்கிறது.
பின்னர் அதிகாலை 5 மணிக்கு நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரத்துடன் கோயில் வளாகத்தில் திருவீதி உலா வந்து கோவில் கோபுரம் முன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.