கோட்டைப்பெருமாள் கோயிலில் கூடாரவல்லி

கூடாரவல்லி நிகழ்வையொட்டி, திருப்பத்தூா் கோட்டை கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கோட்டைப்பெருமாள் கோயிலில் கூடாரவல்லி

கூடாரவல்லி நிகழ்வையொட்டி, திருப்பத்தூா் கோட்டை கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மாா்கழி மாதம் அனுசரிக்கப்படும் பாவை நோன்பின் 27-ஆம் நாளில் பெருமாள் கோயில்களில் ‘கூடாரவல்லி’ என்ற நிகழ்வு நடத்தப்படுகிறது. திருப்பத்தூா் கோட்டை கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் இந்த நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள் திருப்பாவை பாசுரம் பாடினா். ஏராளமானோா் சுவாமி தரிசனம் செய்தனா். இரவு 7 மணியளவில் ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com