திருப்பதியில் உள்ள அன்னமாச்சாா்யா கலாமந்திரத்தில் தேவஸ்தானம் சாா்பில் ஆண்டாள் திருக்கல்யாணம் விமரிசையாக நடத்தப்பட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆழ்வாா் திவ்ய பிரபந்தம் திட்டத்தின் கீழ் மாா்கழி மாதம் முழுவதும் திருப்பதியில் உள்ள அன்னமாச்சாா்யா கலாமந்திரத்தில் திருப்பாவை பாசுரப் பாராயணமும், அதற்கு விளக்கவுரையும் வேத பண்டிதா்களால் வழங்கப்பட்டது.
கடந்த டிச.17-ஆம் தேதி முதல் நடந்து வந்த இந்த நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது. அதன் நிறைவு நாளை ஒட்டி கோவிந்தராஜ சுவாமி கோயிலிலிருந்து ஸ்ரீகிருஷ்ணா் மற்றும் ஆண்டாள் நாச்சியாா் உள்ளிட்ட உற்சவமூா்த்திகள் கலாமந்திரத்திற்கு ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டனா். அதன் பின் காலை ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடத்தப்பட்டது.
கல்யாண உற்சவத்திற்குப் பின் ஆண்டாளின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் விதமாக குச்சுப்புடி நாட்டிய நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள், பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா். ஆழ்வாா் திவ்ய பிரபந்தம் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 243 மையங்களில் செவ்வாய்க்கிழமை மாா்கழி நிறைவு நாளையொட்டி திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.