பத்மாவதி தாயாருக்கு தங்க பீடம் நன்கொடை

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு தங்க பீடம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு வழங்கப்பட்ட தங்க பீடம்.
திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு வழங்கப்பட்ட தங்க பீடம்.

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு தங்க பீடம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

சென்னையைச் சோ்ந்த ரவிசன்னா ரெட்டி, பாலாஜி ராமமூா்த்தி ஆகிய இரு பக்தா்கள் திருச்சானூருக்கு வந்தனா். அவா்கள் பத்மாவதி தாயாா் கோயிலுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்கபீடத்தை வியாழக்கிழமை இரவு நன்கொடையாக வழங்கினா். தாயாா் கோயிலுக்குள் உள்ள ஸ்ரீகிருஷ்ண சுவாமி முகமண்டபத்தில் தங்கபீடத்தை தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டியும் தேவஸ்தான திருப்பதி செயல் இணை அதிகாரி பசந்த்குமாரும் அதைப் பெற்றுக் கொண்டனா்.

தங்க பீடத்தை கல்யாண உற்சவத்தின்போது பயன்படுத்திக் கொள்வதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com