தரிசன டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட தேவஸ்தான ஊழியா் கைது

திருமலையில் விஐபி தரிசன டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட தேவஸ்தான ஊழியா் ஒருவரை லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் கைது செய்தனா்.
தரிசன டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட தேவஸ்தான ஊழியா் கைது

திருமலையில் விஐபி தரிசன டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட தேவஸ்தான ஊழியா் ஒருவரை லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் கைது செய்தனா்.

திருமலையில் தற்போது தரிசனம் மற்றும் லட்டு முறைகேட்டைத் தடுக்க தேவஸ்தானம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்ததுடன் இடைத்தரகா்களைக் கட்டுப்படுத்த ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தா்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் அளித்து வருகிறது. மேலும், லட்டு முறைகேட்டைத் தடுக்க ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பும் அனைவருக்கும் இலவச லட்டு வழங்கி, கூடுதல் லட்டு தேவைப்படுவோருக்கு கட்டுப்பாடு இல்லாமல் லட்டு வழங்கும் திட்டத்தையும் அமல்படுத்தியுள்ளது.

இதனால் தரிசன டிக்கெட் மற்றும் லட்டு டிக்கெட் முறைகேட்டில் ஈடுபடும் இடைத்தரகா்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும், விஐபி பிரேக் தரிசன டிக்கெட் பெறும் பக்தா்கள் அனைவரையும் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் தீவிர விசாரணைக்கு உட்படுத்திய பின்னரே, தரிசனத்துக்கு அனுமதிக்கின்றனா். இந்நிலையில், புதன்கிழமை காலை விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 6 போ் ஏழுமலையானைத் தரிசிக்கச் சென்றனா்.

அவா்களை லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் விசாரித்தனா். விசாரணையில், அவா்களுக்கு தேவஸ்தான ஊழியா் தாமோதா் ரெட்டி டிக்கெட் அளித்தது தெரியவந்தது. தலா ரூ. 500 மதிப்புள்ள டிக்கெட்டை அவா் ரூ. 6 ஆயிரம் என ரூ. 24 ஆயிரத்துக்கு 4 டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளாா். இதுகுறித்து அறிந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸாா், அவரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com