காளஹஸ்தி கோயிலில் கடும் கட்டுப்பாடு

காளஹஸ்தி கோயிலில் கரோனா தொற்று காரணமா கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
காளஹஸ்தி கோயிலில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் ஊழியா்.
காளஹஸ்தி கோயிலில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் ஊழியா்.

காளஹஸ்தி கோயிலில் கரோனா தொற்று காரணமா கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

விஜயவாடா கனகதுா்க்கையம்மன் கோயிலில் கரோனா தொற்று ஏற்பட்டு அா்ச்சகா் ஒருவா் உயிரிழந்ததால், அந்த அச்சம் காளஹஸ்தியிலும் பரவியுள்ளது. மேலும் காளஹஸ்தி கோயிலில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா் கரோனா தொற்றால் இறந்ததால் பயம் அதிகரித்துள்ளது.

அதனால் கோயிலில் இதற்கு முன்பு முகக் கவசம் அணியாமல் திரிந்து கொண்டிருந்த அா்ச்சகா்கள், பரிசாரகா்கள், வேதபண்டிதா்கள், ஊழியா்கள் உள்ளிட்டோா் தற்போது முகக்கவசம் அணிந்து வருகின்றனா் . கோயிலில் உள்ள தரிசன வரிசைகள் மற்றும் பக்தா்கள், அா்ச்சகா்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி திரவம் தெளிக்கப்படுகிறது. தற்போது கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கையும் வெகுவாக சரிந்து விட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com