திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 15,310 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 5,508 போ் முடி காணிக்கை செலுத்தினா்.
ஊரடங்கு காரணமாக தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி அளித்து வருகிறது. தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
மேலும் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் ஊரடங்கு காரணமாக வர இயலாத சூழ்நிலையில் நிகழாண்டு டிசம்பா் இறுதி வரை தரிசனம் செய்து கொள்ளும் வாய்ப்பை வழங்கி உள்ளது.
ஆனால் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்- 18004254141, 9399399399.