எதிர்பார்த்த பணவரவு கிடைக்கப்போகுது இவர்களுக்கு: வாரப் பலன்கள் (ஏப்.16 - 22)

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (ஏப்ரல் 16 - ஏப்ரல் 22) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 
எதிர்பார்த்த பணவரவு கிடைக்கப்போகுது இவர்களுக்கு: வாரப் பலன்கள் (ஏப்.16 - 22)

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (ஏப்ரல் 16 - ஏப்ரல் 22) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உங்களின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். பொருளாதார நிலைமை சீராக இருக்கும். தொலைவில் இருந்து நல்ல செய்திகள் வரும்.  பணவிரயம் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி நிலவும்.  

உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு விரும்பிய இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். எதிலும் நிதானமாகச் செயல்படவும்.வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு புதிய கிளைகளைத் திறப்பீர்கள். கூட்டுத் தொழிலைத் தவிர்க்கவும். விவசாயிகளுக்கு கால்நடைகளாலும், நீர் வளர்த்தாலும் நல்லபலன் கிடைக்கும். புதிய குத்தகை முயற்சிகளில் துணிந்து ஈடுபடலாம். 

அரசியல்வாதிகள் தங்கள் அயராத உழைப்பினால் தொண்டர்கள் மனதில் இடம் பிடித்துவிடுவீர்கள். மாற்றுக் கட்சியினரும் பாராட்டும் வகையில் சமூக சேவையில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினரின் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். 

பெண்மணிகளுக்கு உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். மாணவமணிகள் ஆசிரியர் சொற்படி நடந்து கொள்வீர்கள். அதிகாலையில் எழுந்து படியுங்கள்.  

பரிகாரம்: விநாயகரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 16, 17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

ரிஷபம்(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் நிலவும் சிக்கல்களும் குழப்பங்களும் விலகி ஒற்றுமை ஓங்கும். பயணங்களால் நன்மைகள் ஏற்படும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். உங்கள் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு உங்களின் சில கோரிக்கைகள் நிறைவேறும். உங்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. வியாபாரிகளின் பொருள்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளின் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். மகசூல் லாபம் சற்று குறைவாகவே இருக்கும். 

அரசியல்வாதிகள் தங்களின் முரட்டுப் பிடிவாதத்தை விட்டு விடுங்கள். முரணான யோசனைகளையும் தவிர்க்கவும். கலைத்துறையினர் சிலர் ஆடம்பரச் செலவுகளைச் செய்து மகிழ்வார்கள். திறமைக்குத் தகுந்தவாறு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

பெண்மணிகள் தங்கள் கணவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். மாணவமணிகள் விடியற்காலையில் கண்விழித்து கல்விக்கான பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். வெற்றிப் பாதை உங்களைச் சேரும்.

பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 17, 18. 

சந்திராஷ்டமம்: இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை சுமாராகவே இருக்கும். வரவுக்கேற்ற செலவுகள் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களின் அலட்சியப் போக்கை பெரிதுபடுத்தாதீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிவோர் உதவிகரமாக இருப்பார்கள்.  

உத்தியோகஸ்தர்களுக்கு வேறு வேலை கிடைப்பதற்கான காலம் கனிந்து கொண்டிருக்கிறது. பொருளாதார நிலை மேன்மையும் உண்டாகும். வியாபாரிகள் கடன் வாங்கி அகலக்கால் வைத்து வியாபாரம் பண்ணாதீர்கள். கொடுக்கல் வாங்கலில் சில சிரமங்களும் சிக்கல்களும் ஏற்படும். விவசாயிகளுக்கு பால் வியாபாரத்தில் நல்ல பலன்கிடைக்கும். விளைச்சல் அதிகமாகி வருமானம் பெருகும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழும். தொண்டர்களின் ஆதரவுடன் நற்பணிகளில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் நடந்து கொள்வார்கள். வருமானம் பெருகும் வாய்ப்பு உண்டு. 

பெண்மணிகள் தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிக்காதீர்கள். அவசியமான செலவுகளைச் செய்து மகிழ்ச்சிகரமாக வாழப் பழகுவீர்கள். மாணவமணிகள் ஆசிரியர்கள் சொன்னபடி நடந்து தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: சிவ பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 16, 18.

சந்திராஷ்டமம்: இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

மனதில் உற்சாகம் பிறக்கும். அனைத்துச் செயல்களும் உங்கள் விருப்பப்படி நிறைவேறும். சகோதர, சகோதரிகளால் நன்மைகள் ஏற்படும். பயணங்களால் நன்மை அடைவீர்கள்.  ஆன்மிக தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எவரிடமும் வெளிப்படையாகப் பழகாதீர்கள். வியாபாரிகள் அகலக்கால் வைத்து வியாபாரத்தை விரிவாக்கம் செய்யாதீர்கள். கொடுக்கல்}வாங்கலில் சற்று சீரான நிலைமை ஏற்படும். விவசாயிகளுக்கு பால் வியாபாரத்தில் நல்ல பலன்கிடைக்கும். புதிய குத்தகைகள் எடுக்கும் வாய்ப்புண்டாகும். 

அரசியல்வாதிகள் மனதில் ஒரு விதமான அச்சமும், குழப்பமும் ஏற்படும். அதனால் சில முடிவுகள் எடுப்பதைத் தள்ளிவைப்பது நல்லது. கலைத்துறையினர் சக கலைஞர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். 

பெண்மணிகளுக்கு வீண் யோசனைகள் உங்களின் மன வலிமையைக் குறைக்கும். பிடிவாதங்களை விட்டுவிடவும்.  மாணவ
மணிகள் நினைத்த மதிப்பெண்களைப் பெற இன்னும் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டி வரும். 

பரிகாரம்: ஸ்ரீஹயக்கிரீவரை வணங்கி வரவும்.  

அனுகூலமான  தினங்கள்: 16, 19. 

சந்திராஷ்டமம்: இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

உங்களின் முயற்சிகள் அனைத்தும் படிப்படியாக வெற்றிகளைத் தேடித் தரும். உற்றார் உறவினர்களால் சிறு தொல்லைகள் ஏற்பட்டு விலகும். செலவுகளும் அதிகரிக்கும்.  உடல் நலத்தில் கவனம் தேவை.  

உத்தியோகஸ்தர்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வியாபாரிகள் கூட்டாளிகளைப் பிரிய நேரிடலாம். புதிய கடன்களை வாங்காதீர்கள். 

வியாபாரத்தில் அகலக்கால் வைக்காமல் இருப்பது மிகவும் நல்லது. விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். கால்நடைகளால் நன்மை உண்டாகும்.  

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தில் ஆதரவு பெருகும். கட்சி மேலிடம் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த சிக்கல்கள் படிப்படியாகத் தீரும். 

பெண்மணிகளுக்கு மருத்துவச் செலவுகள் குறையும். கணவரிடம் அந்நியோன்னியம் அதிகரிக்கும். மாணவமணிகள் பல இடையூறுகளுக்கிடையில் சிறப்பாகப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.   

பரிகாரம்: ஐயப்ப சுவாமியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 17, 19. 

சந்திராஷ்டமம்: இல்லை.


கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலையில் நல்ல வளர்ச்சி காண்பீர்கள். குடும்பத்தில் சில குழப்பங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களும், நண்பர்களும் உங்களுக்கு ஆதரவைத் தருவார்கள். உங்களின் பெயரும், புகழும் படிப்படியாக உயரும். 

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களிடம் எச்சரிக்கை தேவை. மேலதிகாரிகளை அனுசரித்து நடந்துகொள்வது மிகவும் நல்லது. வியாபாரிகள் நண்பர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். நீண்டநாள் கடன் வசூலாக வாய்ப்பு உண்டு. விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலும்,  அதன்மூலம் நல்ல வருமானமும் ஏற்பட வாய்ப்புண்டு. நீர்ப்பாசன வசதியைப் பெருக்கிக் கொள்வீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு எதிலும் மிகுந்த எச்சரிக்கை தேவை. வீண் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். கலைத்துறையினர் உரிய நேரத்தில் ஒப்பந்தங்களை முடித்துக் கொடுத்து நற்பெயர் வாங்குவீர்கள்.  

பெண்மணிகள் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கான  செலவுகளால் சற்று சிரமப்படுவீர்கள். இருந்தாலும் எதையும் சமாளித்துக் கொள்ளும் திறமை உண்டாகும். மாணவமணிகள் படிப்பில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆசிரியரின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கவும் 

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 17, 20. 

சந்திராஷ்டமம்: இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

மற்றவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள். சகோதர, சகோதரிகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். குடும்பத்தில் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தங்களின் கோரிக்கைகள் மேலதிகாரிகளால் நிறைவேற்றப்படும். வியாபாரிகள் தொழிலில் உள்ள போட்டிகளைச் சாதுர்யத்துடன்  சமாளிப்பீர்கள். பிரபலமானவர்களுடன் நட்பு ஏற்படும். விவசாயிகள் கால்நடைகளால் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். விவசாயத் துறையில் நுணுக்கமான விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். 

அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் அனுசரணையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பேச்சில் நிதானம் தேவை. கலைத்துறையினர் கைவசம் உள்ள வேலைகளை எல்லாம் நல்லவிதமாக முடித்துக் கொடுத்துவிடுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

பெண்மணிகளுக்கு கணவரின் உடல்நிலையில் சற்று கவனம் தேவை.  சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாணவமணிகள் கடினமான பாடங்களில் கவனம் செலுத்தி படித்து முன்னேறுவீர்கள். 

பரிகாரம்: சிவ பெருமானையும், பார்வதி தேவியையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 18, 20. 

சந்திராஷ்டமம்: 16, 17.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

நினைத்த காரியங்கள் அனைத்தையும் நினைத்த நேரத்தில் செய்து முடித்து, பொருளாதாரத்திலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.  உடல்நிலை சீராக இருக்கும்.  

உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள். மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வது மிகவும் நல்லது. வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் சென்று உங்கள் பொருள்களை விற்று நல்ல லாபம் அடைவீர்கள்.  கூட்டாளிகள் மூலம் கொடுக்கல், வாங்கலில் நன்மை உண்டாகும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். கால்நடைகளால் லாபம் உண்டாகும்.

அரசியல்வாதிகள் தங்களுக்கு சம்பந்தமே இல்லாத செயல்களைச் செய்து பெயரைக் கெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. ஆகவே கவனம் தேவை. கலைத்துறையினர் வாய்ப்புகளைப் பெறுவதற்கு மிகுந்த சிரமங்களைச் சந்திப்பீர்கள். சக கலைஞர்களின் உதவியால் சில வாய்ப்புகள் கிடைக்கும். 

பெண்மணிகள் பிறரிடம் பேசும் போது கவனம் தேவை. கணவரின் பரிபூரண அன்புக்குப் பாத்திரமாவீர்கள். மாணவமணிகள் பாடங்களை மிகத் தெளிவாகவும், அமைதியாகவும் படிக்க கற்றுக் கொள்வீர்கள். 

பரிகாரம்: முருகப் பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 16, 22. 

சந்திராஷ்டமம்: 18, 19.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தெய்வ அனுகூலம் சிறப்பாக இருக்கும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உற்சாகமான மன நிலையில் இருப்பீர்கள். வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். 

உத்தியோகஸ்தர்கள் கடினமான வேலைகளைச் செய்ய வேண்டிவரும். மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். வியாபாரிகள் எவரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். கடன் கொடுப்பதோ, கடன் வாங்குவதோ கூடாது.  கூட்டுத் தொழிலும் உகந்ததாக இல்லை. விவசாயிகள் தங்கள் கடின உழைப்புக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். உங்களின் பழைய கடன்கள் வசூலாகும்.   

அரசியல்வாதிகள் முக்கிய பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்கள் பேச்சுத் திறமையால் பல நல்ல காரியங்கள் நிகழ வாய்ப்புண்டு. கலைத்துறையினருக்கு  ரசிகர்களின் ஆதரவுடன் புதிய முயற்சிகள் வெற்றியடையும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

பெண்மணிகளுக்கு பேச்சில் நிதானம் தேவை. பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மாணவமணிகள் அதிக மதிப்பெண்களைப் பெற கடுமையாக முயற்சி செய்வீர்கள். அதிகாலை எழுந்து படிப்பதில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 16, 22. 

சந்திராஷ்டமம்: 20, 21.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பச் சூழ்நிலையில் புதிய மாற்றங்கள் தென்படும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்கள் சில தடுமாறிப் போகும். இதனால் வீண் அலைச்சல்களும், உடல் சோர்வும் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் நட்பும் ஒத்துழைப்பும் கிடைக்கும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு பராமரிப்புச் செலவுகள் செய்ய நேரிடும். பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவீர்கள். விவசாயிகளுக்கு  மகசூல் திருப்திகரமாக இருக்கும். விவசாயத்திற்குப் பயன்படும் வாகனங்களை நல்ல படியாக பராமரித்து வைத்துக் கொள்வது நல்லது. 

அரசியல்வாதிகள் சில போராட்டங்களைத் தவிர்க்கவும். கட்சியில் பல போட்டிகளை நீங்கள் சந்திக்க நேரிடும். கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். புதுப்புது வாய்ப்புகள் தானாகவே தேடி வரும். பெண்மணிகளுக்கு உறவினர்களின் அன்பும், பாராட்டும் உங்களுக்கு மன மகிழ்ச்சியைக் கொடுக்கும்.  மாணவமணிகள் பாடங்களை நல்லபடியாகக் கற்று முன்னேற வேண்டிய நேரமிது. ஆசிரியரிடம் நல்ல பெயரை எடுப்பீர்கள். 

பரிகாரம்: இஞ்சிமேடு நரசிம்மரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 17, 21. 

சந்திராஷ்டமம்: 22.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

எடுத்த காரியங்கள் சற்று நிதானத்துடன் வெற்றியைத் தேடித்தரும். பொருளாதாரத்தில் சுமாரான முன்னேற்றம் ஏற்படும். எந்த மனக்கசப்புக்கும் இடம் கொடுக்காமல் எல்லோரையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.  

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்டபடி வேலைகளைக் செய்து முடிப்பீர்கள். பதவிஉயர்வு தற்போது ஏற்பட வாய்ப்பில்லை. வியாபாரிகளுக்கு கூட்டுத்தொழில் தேவையில்லை. தொழிலில் மந்தமான சூழ்நிலை ஏற்படும். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம். மகசூல் சற்று மந்தமாகவே இருக்கும்.  

அரசியல்வாதிகளுக்கு மற்றவர்களால் உங்கள் அந்தஸ்திற்கு குறைபாடுகள் ஏற்படும். மிகவும் கவனம் தேவை.  கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் உதவியால் சில வாய்ப்புகள் வரும். நன்கு ஆலோசித்து முடிவெடுக்கவும். 

பெண்மணிகள் உறவினர்களை அலட்சியப் படுத்தும்படி நடந்து கொள்ளாதீர்கள்.  கணவருடன் மனஸ்தாபம் இல்லாமல் பொறுமையாக இருப்பது மிகவும் நல்லது.  மாணவமணிகள் விளையாட்டில் நிதானத்துடன் ஈடுபடவும்.   சக நண்பர்களுடன் கவனமாகப் பழகவேண்டும்.  மன அமைதிக்கு தியானம் செய்யவும்.

பரிகாரம்: கால பைரவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 21, 22. 

சந்திராஷ்டமம்: இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பண வரவு நன்றாக இருக்கும்.  உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். மனதை ஒரு நிலைப்படுத்த யோகாசனம் போன்றவற்றைச் செய்து மகிழ்வீர்கள். புதுத் தெம்பு பிறக்கும். ஆன்மிகச் சிந்தனைகள் மேலோங்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு தங்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சிறிது காலத்திற்குப் பிறகு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரிகள் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்னை முடிவுக்கு வரும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து நல்ல லாபம் கிடைக்கும்.  நீர்ப் பாசன வசதி நன்றாக இருக்கும். 

அரசியல்வாதிகள் நண்பர்களைப் போல் பழகும் எதிரிகளை இனம் கண்டு கொள்வீர்கள். எதிலும் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். விருது, பாராட்டுகள் குவியும். 
பெண்மணிகள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவீர்கள். இல்லத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். மாணவமணிகள்  கல்வியில் ஆர்வம் செலுத்துவீர்கள்.   உடற்பயிற்சி செய்து உடலை நன்றாகப் பராமரித்துக் கொள்வீர்கள்.  

பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்து வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 24, 25

சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com