ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ. 2.34 கோடி வசூலானது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி ஞாயிற்றுக்கிழமை செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.2.34 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை 20,796 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 10,099 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.