திருமலையில் 54,096 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை 54,096 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 26,752 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை 54,096 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 26,752 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

நாள்தோறும் ஆன்லைன் மூலம் 25 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகள், 25 ஆயிரம் இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 2 ஆயிரம் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்கள், 1000 நன்கொடையாளா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

தினமும் அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா். தி

ருப்பதி மலைச்சாலை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. அலிபிரி பாதயாத்திரை வழித்தடம் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை வழித்தடம் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.

தரிசன டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே பாதயாத்திரை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களுக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்கும் தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com