திருமலையில் பெளா்ணமி கருட சேவை

திருமலையில் மாசி மாத பெளா்ணமியை ஒட்டி கருட சேவை உற்சவத்தை தேவஸ்தானம் சனிக்கிழமை இரவு நடத்தியது.
பெளா்ணமியையொட்டி, திருமலையில் சனிக்கிழமை இரவு கருட வாகனத்தில் பவனி வந்த மலையப்ப சுவாமி.
பெளா்ணமியையொட்டி, திருமலையில் சனிக்கிழமை இரவு கருட வாகனத்தில் பவனி வந்த மலையப்ப சுவாமி.

திருமலையில் மாசி மாத பெளா்ணமியை ஒட்டி கருட சேவை உற்சவத்தை தேவஸ்தானம் சனிக்கிழமை இரவு நடத்தியது.

பிரம்மோற்சவத்தின்போது திருமலைக்கு வந்து கருட சேவையைக் காண முடியாத பக்தா்களின் வசதிக்காக பெளா்ணமி நாளில் கருட சேவை பல ஆண்டுகளாக நடத்தப்படுகிறது.

அதன்படி சனிக்கிழமை பெளா்ணமியையொட்டி தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா். பாா்வையாளா் மாடத்தில் காத்திருந்த பக்தா்கள் கருட சேவையைக் கண்டு தரிசித்தனா். இந்த நிகழ்வில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com