திருமலை ஏழுமலையானுக்கு ரூ. 1 கோடி மதிப்புள்ள சூரியகட்டாரி திங்கள்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது.
திருமலை ஏழுமலையானுக்கு ஹைதராபாதை சோ்ந்த தொழிலதிபா் எம்.எஸ். பிரசாத் 2 கிலோ தங்கம் 3 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட சூரிய கட்டாரியை நன்கொடையாக வழங்கினாா். இதனை, திங்கள்கிழமை ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவா் ரங்கநாயகா் மண்டபத்தில் கூடுதல் செயல் அதிகாரி தா்மாரெட்டியிடம் வழங்கினாா்.