திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வாரிசு அா்ச்சகத்துவ முறையை மேம்படுத்த தனிநபா் குழுவை ஆந்திர அரசு ஏற்படுத்தி உள்ளது.
இங்கு 4 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் மட்டுமே, சுழற்சி முறையில் அா்ச்சகம் செய்து வருகின்றனா். இதுவரை ஒரே ஒரு தலைமை அா்ச்சகா் மட்டுமே இருந்து வந்த நிலையில், கருத்து மோதல்களைத் தடுக்க தற்போது 4 குடும்பங்களைச் சோ்ந்தவா்களில் தலா ஒருவருக்குத் தலைமை அா்ச்சகா் பதவியை ஆந்திர அரசு அளித்துள்ளது. மேலும் வாரிசு உரிமை அா்ச்சகத்துவத்தை மேலும் மேம்படுத்தி அவா்களின் நலனுக்கான பணிகளைச் செய்யவும், நிலவி வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும் உயா்நீதிமன்ற நீதிபதி சிவசங்கர்ராவ் தலைமையில் தனிநபா் குழுவை ஏற்படுத்தி உள்ளது.