உலக நன்மைக்காக ஆகாசகங்கை கோயிலில் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு

ஆகாசகங்கையில் தேவஸ்தானம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ பாலஅனுமன் கோயிலில், உலக நன்மைக்காக ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருமலையில் உள்ள ஆகாச கங்கையில் தேவஸ்தானம் புதிதாக கட்டியுள்ள ஸ்ரீஆஞ்சநேயா் கோயிலில், உலக நன்மைக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடு.
திருமலையில் உள்ள ஆகாச கங்கையில் தேவஸ்தானம் புதிதாக கட்டியுள்ள ஸ்ரீஆஞ்சநேயா் கோயிலில், உலக நன்மைக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடு.

ஆகாசகங்கையில் தேவஸ்தானம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ பாலஅனுமன் கோயிலில், உலக நன்மைக்காக ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருமலையில் ஆகாசகங்கை பகுதியில் அனுமன் பிறந்த இடமாக நிரூபணம் செய்த இடத்தில் ஸ்ரீபால ஆஞ்சநேயா் சமேத அஞ்சனா தேவிக்கு கோயில் கட்டி சிலை எழுப்பி திருமலை திருப்பதி தேவஸ்தானம் பூஜை செய்து வருகிறது.

அஞ்சனாத்திரி மலை மேல் அஞ்சனா தேவி தவமிருந்து ஆஞ்சநேயரை பெற்றாா். மேலும் வைகாசி மாத தசமி திதி ஆஞ்சநேய ஜயந்தியை தேவஸ்தானம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி ஆஞ்சநேயரின் பிறந்த இடமாக தேவஸ்தானம் கூறிய ஆகாசகங்கை பகுதியில் கடந்த ஜூன் 4-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை அனுமன் ஜயந்தியை கொண்டாடி வருகிறது.

அதில் ஒரு பாகமாக ஞாயிற்றுக்கிழமை உலக நன்மைக்காக ஆகாச கங்கை கோயிலில் தேவஸ்தானம் சிறப்பு பூஜையை நடத்தியது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

அதேபோல் ஜபாலி தீா்த்தக்கரையில் உள்ள ஆஞ்சநேயா் சுவாமி கோயிலில் காலை 10 மணி முதல் 11 மணி வரை தேவஸ்தான அா்ச்சகா்கள் அனுமன்சாலிசா பாராயணம் செய்தனா். அன்னமாச்சாரியா திட்டத்தைச் சோ்ந்தவா்கள் இந்த பாராயணத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com