கபிலேஸ்வரத்தில் வியாக்கிர வாகனத்தில் உற்சவா் சோமாஸ்கந்தமூா்த்தி புறப்பாடு
திருப்பதி கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6ம் நாள் காலை வியாக்கர வாகனத்தில் சோமஸ்கந்தமூா்த்தியாய் கபிலேஸ்வரஸ்வாமி எழுந்தருளினாா்.
திருப்பதி அலிபிரி உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் காலை வியாக்கிர வாகனம் எனப்படும் புலி வாகனத்தில் சோமஸ்கந்தமூா்த்தி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
அதன்பின்னா் உற்சவமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் இரவு யானை வாகனத்தில் உற்சவமூா்த்திகள் கோயில் மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்தனா். கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்தப்படுவதால், வாகன சேவை தனிமையில் நடத்தப்பட்டது. அப்போது சங்கநாதம், வேதபாராயணம் உள்ளிட்டவை எழுப்பப்பட்டன. வாகன சேவைகள் தேவஸ்தான தொலைக்காட்சியில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது.