திடீர் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள் (மார்ச் 19 - 25)

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (மார்ச் 19 - மார்ச் 25) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 
மார்ச் மாதப் பலன்கள்
மார்ச் மாதப் பலன்கள்

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (மார்ச் 19 - மார்ச் 25) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் ஏற்றம் இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்கி வீடு, மனை வாங்க ஏற்பாடு செய்வீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் வெற்றி பெறும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவால் வேலைப்பளு குறையும். மேலதிகாரிகளால் அதிகம் பாராட்டப்படுவீர்கள். வியாபாரிகள் நண்பர்களுடன் இணைந்து புதிய வியாபாரத்தைத் தொடங்குவீர்கள். சிறிய முதலீட்டில் வெற்றி கிடைக்கும். விவசாயிகள் புதிய குத்தகை முயற்சிகளில் இறங்க வேண்டாம். சலிப்பில்லாமல் உழைத்தால் நல்ல பலன்களைப் பெறலாம். 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். பிரசாரத்தில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் எதிர்பாராத திருப்பங்களைக் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெண்மணிகள் பெரியோர்களை சந்தித்து ஆன்மிக பலம் பெறுவீர்கள். கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் வெளி விஷயங்களில் ஈடுபாட்டைக் குறைத்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவும். உடற்பயிற்சிகளையும் செய்து வரவும். 

பரிகாரம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 19, 20. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••••

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பூர்வீகச் சொத்து வகையில் இருந்த தடைகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உயரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் வாகனம் வாங்குவதற்கான ஏற்பாடுகளில் முன்னேற்றம் காண்பீர்கள். 

எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் ஈடுபடலாம். கடன் குறையும். எதிலும் நேரடி கவனிப்பு அவசியம். விவசாயிகள் கால்நடைகளால் நல்ல லாபம் காண்பீர்கள். மகசூல் அதிகரிக்கும். 

அரசியல்வாதிகள் உங்களுக்கு எதிராக வேலை செய்பவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். உட்கட்சிப் பூசலால் கவலை அடைவீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களுடனான பனிப்போர் நீடிக்கும். சில ஒப்பந்தங்கள் ரத்தாகும். பெண்மணிகளுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். 

சமூகத் தொண்டுகள் செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். சரும நோய்களை ஆரம்பத்திலேயே கவனித்து கட்டுப்படுத்தவும். மாணவமணிகள் விடாமுயற்சியால் வெற்றி அடைவீர்கள். பெற்றோரை அனுசரித்து நடந்து கொள்ளவும். 

பரிகாரம்: குருவாயூரப்பனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 19, 21. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••••

மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பெற்றோரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உங்கள் காரியங்களைப் பதற்றப்படாமல் செய்து முடிப்பீர்கள். பேச்சில் வசீகரம் உண்டாகும். வருமானம் சற்று உயரும்.  

உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் ஆதரவாக நடந்து கொள்வார்கள். பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் சற்று நிதானத்துடன் ஈடுபடவும். புதிய யுக்திகளைக் கையாண்டு வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் கால்நடைகளை கவனத்துடன் பராமரிக்கவும். தீவிர முயற்சியால் 
வருமானத்தைப் பெருக்குவீர்கள். 

அரசியல்வாதிகளின் மதிப்பு மரியாதை உயரும். அயராத உழைப்பால் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினர் கடின உழைப்பு, விடாமுயற்சியால் முன்னேற்றம் அடைவீர்கள். வருமானம் சற்று மேலோங்கும். பெண்மணிகள் குடும்பத்தில் கணவரின் அதிகாரம் தலைதூக்கும். நேசமாகப் பழகி பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளவும். மாணவமணிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறை
வேறும். நீண்டகாலத் திட்டங்களைத் தீட்ட ஏற்ற காலமாகும். 

பரிகாரம்: சிவபெருமானையும், பார்வதிதேவியையும் வணங்கி வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 20, 21. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••••

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பூர்வீகச் சொத்து மூலம் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். உடலாரோக்கியம் சிறப்பாக இருக்கும். வருமானம் உயரும். உறவினர் மற்றும் நண்பர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.  

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் நன்மை செய்வார்கள். வேலைப் பளுவினால் ஏற்பட்ட சிரமங்கள் குறையும். வியாபாரிகளுக்கு பழைய கடன்கள் வசூலாகும். புதிய முதலீடுகளை செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். விவசாயிகள் முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபாடு காட்டுவீர்கள். மகசூல் 
அதிகரிக்கும். 

அரசியல்வாதிகளைத் தேடி புதுப் புது பொறுப்புகள் வரும். தொண்டர்கள் துணையுடன் பிரசாரத்தில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் பண வரவுக்கு சற்று சிரமப்படுவீர்கள்.  பழைய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பீர்கள். பெண்மணிகள் வீடு, வாகனம் வாங்குவதைச் சற்று தள்ளிப் போடவும். வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். மாணவமணிகள் வெளி விளையாட்டுகளில் அதிகம் ஈடுபட வேண்டாம். கடுமையாக முயற்சித்தால் படிப்புக்கு ஏற்ற பலனைப் பெறலாம்.  

பரிகாரம்: மஹாலட்சுமியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 19, 22. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••••

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

பயணங்களை மேற்கொண்டு செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் பாதிப்படையாது. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எவருக்கும் ஜாமீன் போட வேண்டாம். தீயோர் நட்பு அகலும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயணங்களை மேற்கொண்டு அனுகூலம் அடைவீர்கள். 

மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரிகள் மறைமுக எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். பிறரிடம் பழகும்போது மனதில் பட்டதை எல்லாம் தெரிவிக்காதீர்கள். விவசாயிகள் குத்தகைகளில் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். மகசூல் லாபம் அதிகரிக்கும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு குறைந்து காணப்படும். மறைமுக எதிரிகளால் தொல்லை உண்டாகும். கலைத்துறையினர் சில ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பொருளாதாரச் சிக்கல் ஏற்படும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் உண்டாகும். கணவரின் குடும்பத்தாருடன் அன்பாக நடந்து கொள்ளவும். மாணவமணிகளின் தீவிர முயற்சிக்கு ஆசிரியரின் பாராட்டுகள் கிடைக்கும். கடினமாக உழைத்து அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 21, 22. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••••

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை மேம்படும். செய்தொழிலில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுங்கள். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. ஆகார விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளவும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். அலுவலக வேலைகளில் மிகுந்த சிரமங்கள் ஏற்படும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவை
களைப் பூர்த்தி செய்வதில் அக்கறை காட்டுவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாக இருக்கும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் வருமானம் பெருகும். எதிர்பாராத மகசூல் கிடைத்து பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். 

அரசியல்வாதிகள் கட்சியின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவார்கள். பாராட்டுகளும், பதவிகளும் கிடைக்கும். கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுத்து புதிய ஒப்பந்தங்களில் கையொப்பம் இடுவீர்கள். வருமானம் உயரும். பெண்மணிகள் பிறரிடம் பேசும் போது மிகுந்த கவனத்துடன் பேசவும். கணவர் குடும்பத்தாரிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளவும். மாணவர்கள் வெளிநாடு சென்று கல்வி கற்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கடுமையாக உழைத்து முன்னேறுவீர்கள். 

பரிகாரம்: யோகநரசிம்மரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 19, 22. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••••

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

உங்களின் நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறும். பொருளாதார நிலையில் சற்று முன்னேற்றம் காணப்படும். எதிர்பாராத உதவிகள் உங்களைத் தேடி வரும். பழைய கடன்
களைத் திருப்பிச் செலுத்துவீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் உங்கள் வேலைகளைத் திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து காணப்படும். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். நல்ல லாபம் கிடைக்கும். விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும். முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு நஷ்டங்களைத் தவிர்க்கவும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு குறைவாக இருப்பதால் கவனமாக நடந்து கொள்ளுங்கள். 

கலைத்துறையினருக்கு வரவேண்டிய பாக்கி வசூலாகும். புதிய வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் கணவரின் அன்பு, பாசம் மேலோங்கும். புதியவர்களின் வருகை மகிழ்ச்சி தரும். மாணவமணிகள் பாடங்களை ஆழ்ந்து கவனித்து படிக்கவும். அதிகாலையில் எழுந்து படித்தால் நல்ல பலன் கிட்டும். 

பரிகாரம்: மாங்காடு காமாட்சி அம்பாளை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 21, 23. 

சந்திராஷ்டமம்: 19, 20.

•••••

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சந்தோஷங்கள் பெருகும். சமயோஜித புத்தியுடன் காரியமாற்றுவீர்கள். திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் மீது மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகமாக இருக்கும். கடினமான பணிகளையும் சுறுசுறுப்பாக முடித்து விடுவீர்கள். வியாபாரிகளுக்கு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். புதிய கடை திறப்பீர்கள். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பயிர்கள் செழித்து வளரும். பழைய குத்தகை பாக்கிகளை செலுத்துவீர்கள். 

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது கவனமாக இருக்கவும். உங்களின் கோரிக்கைகளை தலைமையிடம் தெரிவித்து விட்டு அமைதி காக்கவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். திறமைக்குத் தகுந்த மதிப்பும், அங்கீகாரமும் கிடைக்கும். 

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். விரும்பிய ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவ
மணிகள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறப் பாடுபடுவீர்கள். வெளிநாடு சென்று படிப்பதற்கு முயற்சி செய்வீர்கள். 

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 19, 24. 

சந்திராஷ்டமம்: 21, 22, 23.

•••••
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். சகோதர, சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். அலுவலகம் சம்பந்தமான பயணங்களைத் தள்ளிப்போடவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் கவனத்துடன் ஈடுபடவும். விவசாயிகள் கால்நடைகளுக்கு செலவு செய்ய நேரிடும். நீர்ப்பாசன வசதிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் 
பலனளிக்கும். மகசூல் நன்றாக இருக்கும். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் எதிர்ப்புக்கு ஆளாவீர்கள். அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதற்கு சிரமப்படுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வருவதிலும் தாமதம் ஏற்படும். பெண்மணிகள் சோம்பேறித் தனத்திற்கு இடம் தராமல் வீட்டு வேலைகளைக் கவனிக்க வேண்டி வரும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெற ஆசிரியரின் ஒத்துழைப்பை நாடவும். படிப்பில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: சனீஸ்வர பகவானை வழிபட்டு வரவும். அனுகூலமான  தினங்கள்: 20, 23. சந்திராஷ்டமம்: 24, 25.

•••••

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

எடுத்த காரியங்கள் அனைத்தையும் குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிப்பீர்கள். பெரியவர்களிடம் விரோதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள்.  

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். உழைப்புக்கேற்ற பலனை அனுபவிப்பீர்கள். வியாபாரிகள் புதிய கடன்களை வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்த நினைக்க வேண்டாம். கூட்டாளிகள் பிரிய நேரிடலாம். விவசாயிகள் சுப காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். புதிய உபகரணங்களை வாங்கி விவசாய வளத்தைப் பெருக்குவீர்கள். 

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உங்கள் சிறந்த செயல்களால் நல்ல திருப்பங்கள் ஏற்படும். கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பெயரும், புகழும் அதிகரிக்கும். பெண்மணிகளுக்கு காரணமில்லாமல் மனதில் சற்று அமைதி குறையும். கணவருடனான ஒற்றுமையை பலப்படுத்திக்கொள்ளவும். மாணவமணிகள் கல்வியில் தீவிர ஈடுபாடு காட்டவும். வெளிநாடு சென்று படிக்கும் முயற்சி நிச்சயம் நிறைவேறும். 

பரிகாரம்: ஸ்ரீராமரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 19, 24. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••••

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பயணங்களால் நன்மை உண்டாகும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். உற்றார் உறவினர் களின் வருகையால் உறவு மேம்படும். 

 உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளில் இருந்து விடுபடுவீர்கள். அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபாரிகள் அதிக லாபத்தை எதிர்பார்த்து கடன் தொல்லைகளுக்கு ஆளாக வேண்டாம். கொடுக்கல், வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். 

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். தொண்டர்களின் அயராத உழைப்பினால் நினைத்த காரியங்கள் அனைத்தும் சாதகமாகும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் வருமானம் வரும். தொழில் ரகசியங்களைப் பகிரங்கமாகக் கூறாதீர்கள். 

பெண்மணிகள் நெருங்கியவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை நிதானமாகக் கையாளவும். மாணவமணிகளுக்கு போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். உடற்பயிற்சிகளிலும் கவனம் செலுத்துங்கள். 

பரிகாரம்: காஞ்சி காமாட்சி அம்மனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 20, 25. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••••

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உங்களது விடாமுயற்சியால் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். சம்பந்தமில்லாத விஷயங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம். வரவுக்கு ஏற்ற செலவுகளைச் செய்ய நேரிடும். புதிய வாகனங்களை இப்போது வாங்க வேண்டாம்.  

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். ஊதிய உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். வியாபாரிகள் தங்களின் பொருள்களைச் சந்தையில் விற்க மேற்கொள்ளும் முயற்சிகள் நல்ல பலனைக் கொடுக்கும். கவனமாக இருந்தால் வருமானத்தை அள்ளலாம். விவசாயிகள் வங்கிக் கடன்களைப் பெற்று நல்ல முறையில் பயிர் செய்வீர்கள். மகசூல் பெருகும். 

அரசியல்வாதிகளுக்கு சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் உங்களின் புகழ், அந்தஸ்துக்கு பங்கம் வராது. தொண்டர்களின் ஆதரவு அதிகரிக்கும். கலைத்துறையினரைத் தேடி வாய்ப்புகள் வரும். வருமானம் பெருகும். பெண்மணிகள் புதுப் புது ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும். மாணவமணிகளுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். யோகா, பிராணயாமம் போன்ற பயிற்சிகளை தினமும் மேற்கொள்ளவும்.  

பரிகாரம்: மஹாலட்சுமிக்கு நெய் தீபமேற்றி வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 24, 25. 

சந்திராஷ்டமம்: இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com