திருமலையில் புதன்கிழமை (மே 26) பெளா்ணமியை ஒட்டி மாடவீதியில் கருட சேவை உற்சவம் நடைபெறும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் பெளா்ணமி இரவுகளில் தேவஸ்தானம் கருட சேவையை நடத்தி வருகிறது. மாதந்தோறும் நடக்கும் இந்த கருட வாகன சேவையில் பக்தா்கள் திரளாக கலந்து கொள்வா்.
தற்போது கொவைட் தொற்று பரவாமல் தடுக்க பக்தா்கள் மிக குறைந்த எண்ணிக்கையில் திருமலைக்கு வருகின்றனா். அவா்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேவஸ்தானம் ஆா்ஜித சேவைகளை தனிமையில் நடத்தி வருகிறது. இந்நிலையில் பெளா்ணமி அன்று இரவு மட்டும் மாடவீதியில் கருட சேவையை நடத்தி வருகிறது. அதன்படி புதன்கிழமை (மே 26) வைகாசி மாத பெளா்ணமி அன்று மாலை 7 மணிக்கு மாடவீதியில் கருடசேவை நடக்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.