"காலம் காலமாக மனிதர்கள்
விலங்குகள் உயிரினங்கள்
மாறினாலும் தான் மட்டும்
பாதை மாறாத வழுவாத
ஒப்பில்லா உழைப்பாளியே "
" காலை நேரத்து இளங்கதிர்
உதயசூரியனும் மாலை
நேரத்து அடிவானத்தில்
மறையும் சூரியனும் காண
கண்கோடி வேண்டும் என்றும் "
தாக்கம் அல்ல சூரியன்
தாகம் பெருகும் அணுக்கதிரே"
"பசும்தளிரும் பசுமையும்
பூத்துக்குலுங்க நறுமணம்
மண்வாசனை பரவ, கடல்நீரை
ஆவியாக்கி மழை பெய்யச்
செய்யும் இயற்கை விஞ்ஞானி,
தாகம் தீர்க்கும் சூரியன் "
" உன்னை தேடும் நாட்களும் உண்டு
உன்னை சாடும் நாட்களும் உண்டு
றட்சி தாகம் தாக்கம் உச்சம் நீச்சம்
என்பதெல்லாம் உன் பருவ
முதிர்ச்சி திருவிளையாடளோ
கதிரவனே செங்கதிரோனே ?"
" நீ இல்லாமல் ஓர் அணுவும்
அசையாது என்பதை நித்தம்
சுட்டிக்காட்டி, அடிமனதில்
என்றுமே மக்களின்
மோகத்தை தாகமாக உன்
பக்கம் சாய்த்த கதிரவனே
சேவகனே சிரஜ்ஜிவியே
வாழ்க வளர்க ..சூரிய தாகம்"