குழந்தையின் சிரிப்பு,
ஆட்டம் பாட்டம்,
வெகுளித் தன்மை,
திறந்த மனம்
தூய்மையான
மழை நீர்போல...
அது வளர வளர
வளர்ப்போரின்
எண்ணங்கள்,சொற்கள்
சேரச்சேர,
சுற்றுப்புறத் தாக்கம்
கூடக்கூட,
அனுபவங்களின்
தோல்வியும், கசப்பும்
கலக்கக்கலக்க,
மனிதன்
உயிரிகள் நிறைந்த
ஆற்று நீராகி,
உப்புக்கள் நிறைந்த
குட்டை நீராகி.....
மனிதன்
அசுத்தங்களை நீங்கி,
வெப்பத்தில் ஆவியாகி,
மீண்டும் மேகமாகி,
தூய்மையான
குழந்தை போன்ற
மழை நீராக,
தேவை
அனுபவங்கள்,
திறந்த மனம்,
கற்றல்,
பாடங்கள்,
திருந்துதல்,
தெளிவடைதல்!
மழைநீர் சுழற்சி போல,
மனிதர் வாழ்வு
சுழலும் போலும்!