ஆறு குளம் கடல் மண்
எதுவானாலும் எளிதில் கலந்து
சங்கமம் ஆகும் ஒப்பற்ற
சமத்துவ குணம் கொண்ட
மழை நீர் போல வாழ்க்கை
ஏக்கத்தையும் தாக்கத்தையும்
ஏற்படுத்த கூடியது எப்படி
வரும் என்ற நிலை தெரியாதது
மழை நீர் வானத்து புதுநீர் " .
மனதை மண்ணை குளிர்வித்து
போற்றி வழிபடும் தெய்வம்
வரவை வழிமேல் விழி வைத்து
தேட வைக்கும் உயிர்
தேடல் மழைநீர் போலவே
பிரார்த்தனை பல கண்டதும்
மனம் இறங்கி குளிர்விக்கும்
கொடையாளி தியாகி
மழை நீர் போல வழிகாட்டி "
சேருகின்ற இடத்தில் தன்
குணம் விட்டு இடம் தன்மை மாறி
பயணிக்கும் உன்னத
தன்மை கொண்ட மழை நீர்
போல வேறு இல்லை என்றும் "
மழை நீர் போல உறவு
கொண்டாடி தயாள குணத்தால்
தரணி செழிக்க நாமும் வாழ்வோம்
மழை நீர் போல