கவிதைமணி
மறு ஜென்மம்: தஞ்சை. ரீகன்
மண்ணுலகை காலம் தவறாது
மழை பொழிந்து நனைத்திட
மண் மலடாகிடாமல் நாம் காத்திட
மரங்கள் தளிர்த்திட
மண் வளம் பெற்றிட
மகசூல் பெருகிட
மனிதன் அதில்
மகிழ்ந்திட
மக்களின் பஞ்சமெல்லாம் தீர்ந்திட
மனம்நிறைந்து நான் வாழ்ந்திட
மறுஜென்மம் ஒன்று வேண்டும்..!!!