மறுஜென்மம் என்று ஒன்று இருப்பின்.......
சுயநலம் சுத்தமாக இல்லாது
பொதுநலம் விரும்பும் அரசியல்வாதியும்.......
கிம்பளத்தைப் பெறாமல்
சம்பளத்தை மட்டுமே
வாங்கிப் பணிபுரியும் அரசு அதிகாரியும்.....
பெற்றோரை நட்டாற்றில் தவிக்க விடாது
உற்றதுணையாய் இருந்து காக
உதவும் பிள்ளையும்.....
முதுமை எய்தியோரைப் பாராமாய் நினைத்து
ஒதுக்கி வைக்காமல்
பாசமாய் நினைப்போரும்.....
அப்பாவி மக்களைக்
கொன்று குவிக்கும்
அநியாயத் தீவிரவாதியும்.....
காசு ஒன்றே குறியாய்க் கொண்டு
கலப்படம் செய்து
உயிர் பறிப்பவரும்.....
கல்விக்கூடம் என்று சொல்லி
கொள்ளைக்கூடம் நடத்துபவரும்......
எங்கு இல்லையோ...
அங்கே நான் பிறக்க வேண்டும்.