வெயிலில் வருந்தியவர்கள் நிழலை தேடி,
கற்பனை கண்டவர்களெல்லாம் நிஜங்களை தேடி,
உறவுகளை உணர்ந்தவர்களெல்லாம் ஒற்றுமை தேடி,
செலவு செய்பவர்கள் செல்வத்தைத்தேடி,
துன்பத்தில் துவண்டவரெல்லாம் தூக்கம் தேடி,
உழைத்து களைத்தவர்களெல்லாம் ஓய்வு தேடி,
உண்மையில் உறைந்தவர்களெல்லாம் உன்னதம் தேடி,
பொய்மையில் பொசுங்கியவர்கள் வீழ்வைத்தேடி,
புகழில் புழுக்கம் அடைந்தவர்கள் உண்மை தேடி,
அனைத்தும் கடந்தவர்கள் அமைதி தேடி.