கவிதைமணி
மேகத்தில் கரைந்த நிலா: ப.வீரக்குமார்.
பிறை சூடிய பெருமான்
பிள்ளைகளின் கலியுகக்
கலங்கலைக் கண்டு
கொதித் தாடிய
தாண்டவத்தால்
கூந்தலுக்குள் சிக்கித்
திணறி மேகக்
கூந்தலின் மோகத்தால்
மோதி மோதி
சாயலை இழந்து
நெற்றிக்க ணெரித்த
நினைவைக் காட்டியது.