கவிதைமணி
நதிகரையின் நினைவலைகள்: கவிசுகா
செம்புலப் பெயல் நீராய்
அன்பினில் திளைத்த அழகிய நாட்கள்
உலாவரும் நதிக்கரை நினைவலைகளாய்...
ஆறோடும் நீரோடும் உறவாடி
ஊரோடு உயிர்த்திருந்த நாட்கள்...
தண்ணீரில் முகம் பார்க்கும்
தண்நிலவில் நின்முகம் பார்த்து
பெண்ணிலவாய் மலர்ந்த நாட்கள்
படித்துறையில் அன்பைப் பரிமாறிய நாட்கள்..
ஒன்றல்ல இரண்டல்ல
பட்டியலிட்டு சொல்ல...!
நினைவுகள் அலைகளல்ல
வந்து வந்து செல்ல - அவை
சுவடுகள்... மனம் வருடும் சுகங்கள்!