கவிதைமணி
வஞ்சம் செய்வாரோடு: உமாதுரை
நம்பிக்கைக் கொண்ட நண்பர்கள்
நாடகம் ஆடினார்கள்
உண்மையாய் இருக்க வேண்டிய உறவுகள்
உதறித் தள்ளினார்கள்
அன்பு காட்ட வேண்டிய அன்பர்கள்
அந்நியர்கள் ஆனார்கள்
பெருமை சேர்க்க வேண்டிய பிள்ளைகள்
பெற்றோரை பரிதவிக்கச் செய்தார்கள்
வாழ்க்கை என்னும் தேன்கூடு
நயவஞ்சகம் செய்வோரால் கலைந்தே.