காதல் மனையாளின்
ஊடலில்தான்
கோபம் கொஞ்சி விளையாடும்;
அவளின் சிணுங்கலில் ஒரு
சிருங்காரம் ரீங்காரம்;
கூடலில்
உச்சம் தொட அதுதானே
அச்சாரம்;
பிஞ்சு மழலைகள்
பேதமேதுமின்றி சேட்டைகள்
பல செய்து,நம்மிடம்
கொஞ்சி விளையாடும்;
அப் பொழுதுகளுக்கு இக்
குவலயம் ஈடாகுமோ?
கோபமும் வருமோ?
பொய்க் கோபங்களால் ஒருபோதும்
பொல்லாங்கு நேர்வதில்லை;
கொஞ்சும் கோபங்கள்,
மிஞ்சினால் தான் பழி நேரும்;
பாபம் சேரும்!