தேவையானவை:
பலாப்பழம் - 10
மைதா மாவு - 1 கிண்ணம்
வெல்லம் - 1/4 கிலோ
ஏலக்காய் - 4
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: வெல்லத்தைத் தேவையானஅளவு தண்ணீர்விட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர், மைதாமாவில், கரைத்து வைத்துள்ள வெல்லக் கரைசலை கொட்டி அத்துடன் உப்பு, ஏலக்காயைத் தூள் செய்து சேர்த்து லேசான கெட்டிப் பதத்தில் கலந்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், அதில் கொட்டை நீக்கிய பலாப்பழ சுளையை ஒவ்வொன்றாக எடுத்து கரைத்து வைத்துள்ள மைதாமாவில் தோய்த்து எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். சுவையான பலாப்பழ சுழியம் ரெடி.