தேவையான பொருட்கள்
கேப்பை- 1 கிலோ
கேப்பையை களைந்து ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஓரீரவு ஒரு மெல்லிய துணியில் போட்டு வைக்கவும். மறு நாள் காயவைக்கவும்.
காய்ந்த உடன் வறுத்து மாவு ஆலையில் அரைத்து வைக்கவும்.
மாவு-1 கிண்ணம்
மாவில் உப்புப் போட்டு கொதி நீர் ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறவும். சிறிய கொழுக்கட்டைகளாக செய்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
பழுத்த நேந்திரம் பழம் - 2
பழத்தின் தோல் உரித்து வில்லைகளாக (சுமார் 2 இன்ச் தடிமன்) நறுக்கவும். கொழுக்கட்டை வேக வைக்கும் போதே பழத்தையும் இட்லித் தட்டின் துளைகள் உள்ள
பகுதியில் வைத்து வேகவிடவும். அதாவது பழத்தின் கீழ் நீர் தேங்கும் வாய்ப்பு இருந்தால் பழத்தின் ருசி குறையும்.
புதிதாக உடைத்த தேங்காய் - 1 மூடி
தேங்காய் சில் கீறி அதன் பின்னால் உள்ள தோலைச் சீவி எடுத்து வைக்கவும்.
சாப்பிடும் முறை:
தேங்காய் சில் ஒரு கடி, ஒரு கொழுக்கட்டை என சாப்பிடவும். இடையில் நேந்திரம் பழம் சாப்பிடவும். ஒரு தட்டில் கொழுக்கட்டைகளைக் கொட்டி சுற்றிலும் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டால் உடனே காலியாகிவிடும். இதுவும் சரிவிகித உணவுதான்.