தேவையான பொருள்கள்:
பச்சரிசி - 2 கிண்ணம்
உளுந்து - அரை கிண்ணம்
பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு - தலா 1 மேசைக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
வெல்லம் - இரண்டரைக் கிண்ணம்
ஏலப்பொடி - கால் தேக்கரண்டி
எண்ணெய், நெய் - தேவையான அளவு
உப்பு - 1 சிட்டிகை
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
செய்முறை:
ஊறிய அரிசி, பருப்பில் நீரை வடித்து தேங்காய்த் துருவல் சேர்த்து கெட்டியான பதத்தில் மைய அரைத்துக் கொள்ளவும்.
வெல்லத்துடன் அரை கிண்ணம் தண்ணீர் சேர்த்து சூடாக்கி கரைந்ததும், வடிகட்டி மாவில் ஊற்றவும்.
அத்துடன் ஏலக்காய்த் தூள், உப்பு, சிறிதளவு நெய் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கரைத்த மாவை ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி இருபுறமும் திருப்பிவிட்டு வேகவைத்து எடுக்கவும்.
இனிப்பு அப்பம் தயார்.