நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 69

திருமாலின் சிறப்புகளாகிய கடலை


அகம்சிவந்த கண்ணினராய் வல்வினையர் ஆவார்
முகம் சிதைவராம் அன்றே முக்கி, மிகும்திருமால்
சீர்க்கடலை உள்பொதிந்த சிந்தனையேன்தன்னை
ஆர்க்குஅடலாம் செவ்வே அடர்த்து.

அனைவரையும்விட மேலான எம்பெருமான் திருமாலின் சிறப்புகளாகிய கடலை எனக்குள் பொதித்துவைத்திருக்கிறேன், இனி தீய வினைகளால் என்னை நெருங்கித் துன்புறுத்த முடியுமா? (முடியாது!)

ஆகவே, அந்தத் தீய வினைகள் வருந்திக் கண் சிவக்கின்றன, சிதைந்துபோகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com