நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 70

ஆயிரம் பெயர்களைக் கொண்டவன்,

அடர்பொன்முடியானை, ஆயிரம்பேரானை,
சுடர்கொள் சுடர்ஆழியானை, இடர்கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதுஆகில் யாதே இனி?

அடர்ந்த பொன்னாலான திருமுடியைக்கொண்டவன், ஆயிரம் பெயர்களைக்கொண்டவன், சுடர்களையெல்லாம் வெல்லும் பிரகாசமுள்ள சக்ராயுதத்தைக்கொண்டவன் எம்பெருமான்,

அத்தகைய பெருமானை, என்னுடைய துயரங்களைப் போக்கும் தாயாக, தந்தையாக எண்ணினேன், எனக்குள்ளே அவனை வைத்தேன், இனி எனக்கு என்னவானால் என்ன?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com