பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவிமலர்என்றும் காண்தோறும், பாவியேன்
மெல்ஆவி மெய்மிகவே பூரிக்கும், அவ்அவை
எல்லாம் பிரான்உருவே என்று.
பூவைப்பூ, காயாம்பூ, நீலப்பூ, மலர்கின்ற செங்கழுநீர்ப்பூ ஆகியவற்றைப் பார்க்கும்போதெல்லாம், பாவியாகிய என்னுடைய மென்மையான ஆவியும் உடலும் மிகுதியாகப் பூரித்துப்போகும், காரணம், அவையெல்லாம் எம்பெருமானுடைய உருவமாகத் திகழ்கின்றனவே!