என்றும் ஒருநாள் ஒழியாமை யான்இரந்தால்,
ஒன்றும் இரங்கார், உருக்காட்டார், குன்று
குடையாக ஆ காத்த கோவலனார், நெஞ்சே,
புடைதான் பெரிதே புவி.
நெஞ்சே,
நான் ஒவ்வொருநாளும் எம்பெருமானை வணங்குகிறேன், அவருக்குத் தொண்டுசெய்யும் வாய்ப்பைக் கோருகிறேன்,
ஆனால் அவரோ, என்மீது இரக்கம் காட்டவில்லை, தன்னுடைய திருவுருவை எனக்குக் காண்பித்து அருளவில்லை.
குன்றைக் குடையாகப் பிடித்துப் பசுக்களையெல்லாம் காத்த கோவலனார் எம்பெருமான், அவருடைய அருள்வெள்ளம் பாயாத மேட்டுநிலத்தில் நாம் இருக்கிறோமோ?