புவியும் இருவிசும்பும் நின்அகத்த, நீஎன்
செவியின் வழிபுகுந்து என்னுள்ளாய் அவிவுஇன்றி,
யான்பெரியன், நீபெரியை என்பதனை யார்அறிவார்,
ஊன்பருகு நேமியாய்! உள்ளு.
எம்பெருமானே,
இந்தப் பூமியும் பெரிய வானமும் உனக்குள் உள்ளன, நீயோ என்னுடைய செவிவழியே புகுந்து எனக்குள் நீங்காமல் இருக்கிறாய், இப்போது, நீ பெரியவனா, நான் பெரியவனா? அது யாருக்குத் தெரியும்?
பகைவர்களின் மாமிசத்தைக் கவர்கின்ற சக்ராயுதத்தை ஏந்தியவனே, இதை யோசித்துப்பார்!