முதற்பத்து மூன்றாம் திருவாய்மொழி - 7

ஒன்று எனவும் பல எனவும் அறிவால்

ஒன்றுஎனப் பலஎன அறிவுஅரு வடிவினுள் நின்ற
நன்றுஎழில் நாரணன், நான்முகன், அரன் என்னும் இவரை
ஒன்றநும் மனத்து வைத்து உள்ளி நும் இருபசை அறுத்து
நன்றுஎன நலம்செய்து அவன்இடை நம்உடை நாளே.

ஒன்று எனவும் பல எனவும் அறிவால் உணர இயலாதபடி அரிய வடிவமாக நிற்கிற, அழகிய நாராயணன், பிரம்மன், சிவபெருமான் என்ற மூவரையும் உங்கள் மனத்தில் சமமாக வைத்து ஆராயுங்கள், அவ்வாறு ஆராய்ந்தால், மற்ற இருவர்மீது உள்ள பற்று நீங்கும், (நாராயணனிடம் பற்று பெருகும்,)

அப்பெருமான் தந்திருக்கிற இந்த ஆயுளின்போதே அவனை நன்கு வணங்குங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com