இராமன் குற்றமற்ற கோமகன் - பேராசிரியர் இரா. மணிமேகலை; பக்.380;
ரூ.160; மணிமேகலைப் பிரசுரம்,சென்னை.
)044-24342926.
கம்பராமாயணத்தின் பல நிகழ்வுகளில் முக்கியமானவை வாலி வதமும், சீதையின் தீக்குளிப்பும். இந்த இரு நிகழ்வுகளும் ஏன் நிகழ்ந்தன, அவை சரிதானா, காப்பிய நாயகன் ராமனால் நிகழ்ந்த அவற்றுக்கு உள்ள முக்கிய காரணங்கள் போன்றவை காலம்காலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. நூலாசிரியரும் இதில் நீண்ட ஆய்வு மேற்கொண்டு அவை நிகழ்த்தப்பட்டதால் ராமனுக்கு இகழ் சேர்க்க அல்ல, புகழ்தான் சேர்க்கின்றன என தன் தரப்பு வாதங்களை எடுத்துரைக்கிறார். கம்பராமாயணம் குறித்து எண்ணற்ற நூல்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றுள் இந் நூலை முக்கியமானதாக்க நூலாசிரியர் மேற்கொண்ட கடின உழைப்பு, முயற்சி, ஆய்வு ஆகியவற்றை படிக்கையில் அறிய முடிகிறது. கம்பன் பிரியர்களுக்கு இந் நூல் ஓர் அட்சய பாத்திரம்.