திறந்த சொர்க்கம்- தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா; பக். 315; ரூ. 250; ஓங்காரம், சென்னை-600 080. )044-2687 2525.
தவத்திரு சுவாமி ஓங்காரநந்தாவின் இந்நூல், ஆன்மிகத்தில் மேன்மை அடைய விரும்புபவர்களுக்கானது. உடல், உயிர், உலகம், இயற்கை மற்றும் அதன் இயல்புகளின் மர்மங்களை அறிந்து உணர்வதற்கானது. "சொர்க்கத்தை எங்கேயும் தேடி அலைய வேண்டாம். உன்னுள் இருக்கின்ற சொர்க்கத்தை நீயே திறக்க முடியும்' என சுவாமிகள் ஆணித்தரமாகக் கூறுகிறார். அதற்கான வழிமுறைகளையும் ஆங்காங்கே தெளிவுபடுத்தியிருக்கிறார். பணத்திலும் பதவியிலும் மட்டுமே உழல்பவர்களுக்கு இந்நூல் புரியாத புதிராக இருக்கும் அதேவேளையில், ஆன்மிக நாட்டமுள்ளவர்களுக்கு அவர்களது வாட்டத்தைப் போக்கும் அருமருந்தாகவும் இருக்கிறது, இந்த "திறந்த சொர்க்கம்'.