ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - டாக்டர் உ.வே.சாமிநாதையர்; வெளியீடு: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் 2, அருண்டேல் கடற்கரைச் சாலை, பெசன்ட் நகர், - சென்னை- 90
ஆசிரியர் - மாணவரின் குருபக்திக்கு இலக்கணமாகத் திகழ்கிறது இந்தச் சரித்திரம். "மகாவித்துவான்' மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் முதன்மைச் சீடரான "தமிழ்த் தாத்தா' உ.வே.சா., தன் குருநாதரின் மீது கொண்ட அளப்பரிய குருபக்தியின் காரணமாக உருவாக்கியதே இந்நூல்.
÷தன் ஆசிரியரிடம் நேரில் அனுபவித்தவை, ஆசிரியரிடம் கேட்டறிந்தவை, நூல்களின் வழி அறிந்தவை, கடிதங்கள் போன்றவைதான் இச் சரித்திரத்திற்கு அடித்தளமிட்டுள்ளன. இரு தொகுதிகளாக உ.வே.சா., எழுதி வெளியிட்டதை ஒரே தொகுதியாகக் கொண்டு, மூல நூலிலிருந்து எந்தவித மாற்றமும் இல்லாமல் மறுபதிப்பு செய்துள்ளனர்.