செஞ்சொல் உரைக்கோவை - திருமுருக கிருபானந்த வாரியார்

செஞ்சொல் உரைக்கோவை - திருமுருக கிருபானந்த வாரியார்; பக்.292; ரூ.86; குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை-87; )044 - 4284 6363.
செஞ்சொல் உரைக்கோவை - திருமுருக கிருபானந்த வாரியார்

செஞ்சொல் உரைக்கோவை - திருமுருக கிருபானந்த வாரியார்; பக்.292; ரூ.86; குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை-87; )044 - 4284 6363.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் கிருபானந்த வாரியார் ஆற்றிய சொற்பொழிவுகளை எட்டுக் கட்டுரைகளாக்கி அவற்றைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார்கள்.
இலக்கிய இன்பம், முத்தமிழ், திருப்புகழ் இன்பம், தேவார இன்பம், பெரியபுராணச் சிறப்பு, கந்தபுராண நுண்பொருள், இராமாயண சாரம், சைவசித்தாந்தம் ஆகிய எட்டுக் கட்டுரைகளிலும் தமிழின்பத்தையும், பக்தியின்பத்தையும் வாரி வாரி வழங்கியிருக்கிறார் கிருபானந்த வாரியார்.
எப்பொருள் குறித்து அவர் பேசினாலும், அவற்றை விளக்க மிகவும் எளிமையான, சுவையான, நடைமுறை சார்ந்த உதாரணங்களோடு விளக்கியிருக்கிறார்.
"ஒரு பாத்திரத்திலே தண்ணீர் கொட்டி டார்ச் லைட்டை அடியுங்கள். அந்தத் தண்ணீர் முழுக்க அந்த ஒளிபோய் அப்படி அலையும். அதுபோல, சிவமாய் இருக்கின்ற அருட்பெருஞ்ஜோதி இந்த ஆன்மாவாகிய கடலிலே தோன்றுகிறபொழுது, அந்தத் தண்ணீரிலே ஒளி அத்வைதமாகக் கலப்பதுபோல், சீவனின் சிவஒளி கலக்கின்றது. அத்வைதமாக ஒன்றுபடுகிறது' என்பதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.
புரிந்து கொள்ள முடியாத பல நுட்பமான விஷயங்களை இப்படி எளிமையாக விளக்கும் நூலாசிரியரின் திறன் வியப்பை ஏற்படுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com