எண்ணங்களை வளமையாக்குங்கள் - ஏ.எல்.சூர்யா; பக்.304; ரூ.300; பி பாஸிட்டிவ் புரொடக்ஷன்ஸ், சென்னை-17; ) 044 - 4214 7911.
ஒருவருக்குத் தேவையானதை ஆழ்மனதில் பதிய வைத்துவிட்டால், அது சில சமிக்ஞைகள் மூலமாக பிரபஞ்சத்திடம் கட்டளையாகக் கொடுக்கிறது. பிரபஞ்சம் அதை நிறைவேற்றித் தருகிறது. பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளும் அளவிற்கு ஒத்துப் போகும் வகையிலான, அதற்கு கட்டளை இடும் அளவிற்கு நம் ஆழ்மனதில் தெளிவான, குறிப்பிட்ட பதிவுகளை உருவாக்க வேண்டும். அதைச் சிறப்பாகச் செய்யும் எளிய உத்திகளை பிரபஞ்சமே வகுத்துக் கொடுத்திருக்கிறது. அவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறது.
ஆழ்மனது தொடர்பான பல விரிவான தகவல்களை இந்நூல் பகிர்ந்து கொள்கிறது. ஆழ்மனதில் ஏற்கெனவே பதிந்துள்ள எதிர்மறை பதிவுகளை நேர்மறை பதிவுகளாக மாற்ற இந்நூல் வழிகாட்டுகிறது. தியானம் செய்தலின் முக்கியத்துவம், ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய ஐந்து செயல்கள், அதிகாலையில் செய்ய வேண்டியவை எவை என்பதையும் இந்நூல் விளக்குகிறது.
மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒருவர் எப்படித் திட்டமிட்டுச் செலவு செய்தால் கோடீஸ்வரர் ஆக முடியும் என்பதற்கான வழியை - மிகப் பெரும் பணக்காரர் ஆவதற்கான ஏழு ரகசியங்களைச் சொல்கிறது.
பிரச்னைகளை வாய்ப்புகளாக மாற்ற வழிகாட்டுகிறது. தனிமனித முன்னேற்றத்துக்கு மனம், சொல், செயல் ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விளக்கும் நூல்.