பாடல் 10:
பொருத்தம் இல் சமண் சாக்கியப் பொய் கடிந்து
இருத்தல் செய்த பிரான் இமையோர் தொழ
பூந்தராய் நகர் கோயில் கொண்டு கை
ஏந்து மான்மறி எம் இறையே
விளக்கம்:
பொருத்தமில்=வேத நெறிகளுக்கு பொருத்தமில்லாத; சிறந்த நூல்களாக கருதப்படுவதற்கு பொருத்தம் ஏதும் இல்லாத சமண மற்றும் புத்த இலக்கியங்கள்; சாக்கிய=புத்த
பொழிப்புரை:
வேத நெறிகளுக்கு சற்றும் பொருத்தம் இல்லாத சமணர்கள் மற்றும் புத்தர்கள் கூறும் பொய்யான சொற்களைக் கடிந்து விளக்கும் பெருமான், இமையோர்கள் தொழும் வண்ணம் பூந்தராய் நகரினில் கோயில் கொண்டுள்ளார். அவரே தனது கையினில் மான் கன்றினை ஏந்தியுள்ள சிவபெருமான் ஆவார்.