134. முந்தி நின்ற வினைகள் - பாடல் 5

பெருமானின்  திருமேனி
134. முந்தி நின்ற வினைகள் - பாடல் 5

பாடல் 5:

    பவள வண்ணர் பரிசார் திருமேனி
    திகழும் வண்ணம் உறையும் திருப்புன்கூர்
    அழகர் என்னும் அடிகள் அவர் போலும்
    புகழ நின்ற புரிபுன் சடையாரே

விளக்கம்:

சென்ற பாடலில் திருவடிகளின் தன்மையை எடுத்துரைத்த சம்பந்தர் இந்த பாடலில் பெருமானின்  திருமேனியில் தன்மையை உணர்த்தி, பெருமான் அழகே வடிவானவர் என்று கூறுகின்றார். பரிசு= தன்மை; புரிசடை=முறுக்குண்ட சடை; புன்சடை=செம்பட்டை நிறத்தில் அமைந்துள்ள சடை; சொக்கவைக்கும் அழகு உடைய பெருமானை, பொருத்தமாக மதுரை தலத்தில் சொக்கன் என்று அழைப்பது நமது நினைவுக்கு வருகின்றது.     

பொழிப்புரை:

பவளத்தின் வண்ணம் போன்று சிவந்து காணப்படும் ஒளிவீசும் திருமேனியை உடைய பெருமான்  என்றும் நீங்காது உறையும் தலம் திருப்புன்கூர்; சிறந்த அழகர் என்று பலரும் புகழும் வண்ணம் வீற்றிருக்கும் பெருமான், முறுக்குண்டு பொன்னின் நிறத்தில் காணப்படும் சடையை உடையவர் ஆவார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com