பாடல் 9:
இருவர் நாடிய
அரவன் அன்னியூர்
பரவுவார் விண்ணுக்கு
ஒருவர் ஆவரே
விளக்கம்:
அரவன்=பாம்பினை அணியாக அணிபவன்; விண்ணுக்கு=விண்ணவர்களுக்கு ஒருவன்=ஒப்பற்ற தலைவனாக விளங்கும் இந்திரன்;
பொழிப்புரை:
பிரமன் திருமால் ஆகிய இருவரும் திருவடியையும் திருமுடியையும் தேடி காண முடியாத வண்ணம் நெடிய தீப்பிழம்பாக நின்றவனும், பாம்பினைத் தனது உடலின் பல இடங்களில் கொண்டவனும், அன்னியூர் தலத்தின் இறைவனும் ஆகிய பெருமானை புகழ்ந்து பாடுவோர், இந்திர பதவியை அடைவாரகள்.