பாடல் 4:
பண்ணில் யாழினர் பயிலும் மோந்தையர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
அண்ணலா இருப்பார் இவர் தன்மை அறிவாரார்
விளக்கம்:
அண்ணல்=தலைவர்;
பொழிப்புரை:
பண்ணோடு பொருந்திய இசையினை வெளிப்படுத்தும் யாழினைத் தனது கையினில் கொண்டுள்ள பெருமான் மொந்தை எனப்படும் இசைக்கருவியினை வாசிக்கும் ஆற்றலை உடையவர். இவர் காவிரிபூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலத்தில் தலைவனாக இருந்து அருள் புரிகின்றார். இவரது தன்மை எத்தகையது என்பதை யாரால் அறிய முடியும்.