145. பரசு பாணியர் பாடல் - பாடல் 4

பண்ணில் யாழினர் பயிலும் மோந்தையர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்துஅண்ணலா இருப்பார் இவர் தன்மை அறிவாரார்
145. பரசு பாணியர் பாடல் - பாடல் 4

பாடல் 4:

    பண்ணில் யாழினர் பயிலும் மோந்தையர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
    அண்ணலா இருப்பார் இவர் தன்மை அறிவாரார்

விளக்கம்:

அண்ணல்=தலைவர்;

பொழிப்புரை:

பண்ணோடு பொருந்திய இசையினை வெளிப்படுத்தும் யாழினைத் தனது கையினில் கொண்டுள்ள பெருமான் மொந்தை எனப்படும் இசைக்கருவியினை வாசிக்கும் ஆற்றலை உடையவர். இவர் காவிரிபூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலத்தில் தலைவனாக இருந்து அருள் புரிகின்றார். இவரது தன்மை எத்தகையது என்பதை யாரால் அறிய முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com