ஜோகன்னஸ்பர்க், மே 2: இந்திய கிரிக்கெட் வாரியத்தைப் போன்று தென் ஆப்பிரிக்காவும் இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐசிஎல்) போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடிவு செய்துள்ளது.
வரும் புதன்கிழமை நடைபெற உள்ள கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டத்தில் அது குறித்த இறுதி நிலை தெரியவரும் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் நல சங்கத்தின் முதன்மைச் செயல் அதிகாரி டோனி ஐரிஷ் தெரிவித்துள்ளார்.
ஐசிஎல் போட்டியில் விளையாடிய வீரர்களுக்கான தடையை நீக்குவது குறித்து பிசிசிஐ மேற்கொண்ட முடிவுக்கு முன்னரே தென் ஆப்பிரிக்க வாரியம் அக் கருத்தை முன்வைத்திருந்தது என அவர் கூறியுள்ளார்.