ரோம், மே 2: ரோமில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, பஹாமஸின் மார்க் நாலஸ் ஜோடி அரையிறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவியது.
சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 4-6, 7-6, 8-10 என்ற செட் கணக்கில் டேனியல் நெஸ்டர்- நினாட் ஜிமோன்ஜிக் ஜோடியிடம் இந்திய- பஹாமஸ் ஜோடி வீழ்ந்தது.
இந்த ஆட்டம் 51 நிமிடங்களில் முடிவுற்றது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் போலந்தின் மாரியுஸ்- மார்சின் ஜோடியை பூபதி- நாலஸ் ஜோடி தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
லியாண்டர் பயஸ்- லூகாஸ் லோஹி ஜோடியும் அரையிறுதிச் சுற்றில் தோற்றுப்போனது.
இவர்கள் 5-7, 3-6 என்ற செட் கணக்கில் புருனோ சோரஸ் (பிரேசில்), கெவின் உலியட் (ஜிம்பாப்வே) ஜோடியிடம் வீழ்ந்தனர்.